×

கடத்தூர் பகுதியில் பீர்க்கங்காய் விளைச்சல் அமோகம்

கடத்தூர், டிச.3: தொடர் மழையின் காரணமாக, கடத்தூர் பகுதியில் பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் பீர்க்கங்காய், கோவை, ெசன்னை,  

பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. விலை குறைந்தாலும் பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பீர்க்கங்காய் ₹20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு பீர்க்கங்காய் வரத்து அதிகமாக இருக்கும்,’ என்றனர்.


Tags : Kadathur ,area ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது